Thursday, August 17, 2017

இசைக் கிளர்ச்சி




ஊதுவத்தியிலிருந்து வரும்
வெண்புகை போல
மெதுவாக
வளைந்து நெளிந்து
அந்த அறையை நிரப்பியது ( ராஜாவின்) இசை


நிசப்தத்தின் மேல்
ஒரு வாஞ்சையுடன்
மெல்லிய போர்வையாக படர்ந்தது அந்த இசை


அது இதுவரை கண்டுபிடிக்கப் படாத ஒரு
புது வாசனையுடன் இருந்தது


அதன் ஸ்பரிசம்
பெண் ஆரத்தழுவுவதைப் போலவும்
ஆயிரமாயிரம் நாக்குகள்
சரீரத்தை நிர்வாணமாக்கி தீண்டுவதைப் போலவும்
உடலின் ஒவ்வொரு செல்லையும்
ஆர்கசம் அடையச் செய்தது


சம்மட்டியால் கண்ணாடிக் குவளை ஒன்று
நொறுக்கப் படும் தீவிரத்துடன்
என்னை சுக்கு நூறாக்கியது அந்த இசை


அந்த அமில இசையில்
உலோகமாய் கரைந்து கொண்டும்

அந்த எண்ணெய் திரவ இசையில்
பாம்பாய் நெளிந்து கொண்டும்

நான்



- புத்தன் ராஜரத்தினம்

No comments:

Post a Comment